விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறையப் பலன்களைப் பெறமுடியும்.என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள். கீரைகள் தினமும் எடுத்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் முதியோர்கள். சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக அரைக்கீரை தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை இரத்த நாளங்கள்,ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும்.பிரவசமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும். மணத்தக்காளி வாய்ப்புண்,வயிற்றுப்புண்ணுக்கு கண்கண்ட சஞ்சீவி,மூலநோய்,குடல் அழற்சி கட்டுப்படும்.குடல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2முறை உண்ணத்தக்கது. பசளைக்கீரை மலச்சிக்கலை விரட்டும்.ஆண்மையை பலப்படுத்தும். குளிர்ச்சி தரும் இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும். வெந்தியக்கீரை வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கும்.புரதம் தாதுக்கள்,வைட்டமீன் சி இதில் ஏராளம்.வாரம் ஒரு முறை உண்டு வர மூட்டுவலி,இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும் சிறு நீர் கோளாறு அண்டாது. முளைக்கீரை எவ்வயதினரும்,தினமும் உண்ணக்கூடியது.நல்ல பசியைத் தூண்டும.; காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். அகத்திக் கீரை வைட்டமின்,இரும்புச் சத்து,சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. வி~ங்களை முறிக்கும். கண் பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளை கொல்லும்.ஆனால்,இதனை வயிற்றுக் கோளாறுடையோர்,வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது உண்ணத்தக்கது. கரிசலாங்கண்ணி கீரை வள்ளலாரால் கல்பத்திற்கு இணையாக இது பேசப்படுகிறது. கபம்,பித்தவாயுவையும் கண்டிக்கும்.மூலநோய்,நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து. |